அல் கொய்தா இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஒசாமா பின்லேடன் வெறும் 90 வினாடிகளுக்குள் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற பரப்பான தகவலை அமெரிக்க சீல் படையின் முன்னாள் அதிகாரியொருவர் வெளியிட்டுள்ளார்சக் பாரர் என்ற அமெரிக்க நேவி சீல் படையின் முன்னாள் கட்டளை அதிகாரியாகக் கடமையாற்றியவரே இப்புத்தகத்தினை எழுதியுள்ளார்.
அவர் தற்போது வெளியிட்டுள்ள புத்தகமொன்றில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டமை தொடர்பில் பல புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
பாரர் இத்தாக்குதலில் நேரடியாக பங்குபற்றாதபோதிலும் அதில் பங்குபற்றிய வீரர்கள் பலரின் அனுபவங்களையும், பாகிஸ்தானின் அபோடாபாத்தில் நிகழ்ந்தவற்றைக் கேட்டறிந்தும் அவர் இப்புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
ஆரம்பத்தில் சுமார் 45 நிமிட நேர போராட்டத்திற்கு பின்னரே பின்லேடன் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
எனினும் இப்புத்தகத்தின் படி சுமார் 90 செக்கன்களில் பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாரர் குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட நேர துப்பாக்கிச் சண்டை நடைபெறவில்லையெனவும் மொத்தமாக நான்கு சுற்றுக்கள் மாத்திரமே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதெனவும், ஹெலிகொப்டரில் வந்த படையினர் ஒசாமா தங்கியிருந்த வீட்டு மேல் மாடியில் வந்திறங்கியே அதனுள் நுழைந்ததாகவும் அப்புத்தகத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் பின்லேடனின் மனைவி அமால் துப்பாக்கிக் குண்டு தாக்கி படுகாயமடைந்தார். தொடர்ந்து நடந்த தாக்குதல்களில் அவர் கொல்லப்பட்டார். மேலும் அல்கொய்தாவின் துணைத் தலைவராக இருந்த ஜவாஹிரி மூலம் கூரியர் அனுப்பி வந்ததை வைத்து பின்லாடனின் மறைவிடம் கண்டுபிடிக்கப்பட்டதாக தனது புத்தகத்தி்ல் கூறியுள்ளார்.
ஒசாமா கொல்லப்பட்டபோது அவரின் இளையமனைவி 'அமால்' உம் உடன் இருந்ததாகவும் அவர் ''அது ஒசாமா அல்ல, வேண்டாம், வேண்டாம் "என அரபு மொழியில் கூக்குரலிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இத் தாக்குதலில் பங்குபற்றிய சீல் படையினர் வேர்ஜினியாவில் உள்ள இரகசிய படைமுகாமொன்றிலேயே பயிற்சி பெற்றதாகவும், அரம்பத்தில் இந்நடவடிக்கைக்கு 'கூஸ்ட் ஹொக்ஸ்' எனப்படும் ராடார்களின் கண்களுக்கு மண்ணைத்தூவிச் செல்லக்கூடிய அதிநவீன ஹெலிகொப்டர்களையே பயன்படுத்த எண்ணியிருந்த போதிலும் பின்னர் வேறு ஹெலிகொப்டர்கள் உபயோகப்படுத்தப்பட்டதாகவும் பாரக் குறிப்பிட்டுள்ளார்.
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்புத்தகம் எதிர்வரும் 8 ஆம் திகதி விற்பனைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈரானிய அணுசக்தி நிலைகள் மீது பிரித்தானிய, அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் குறித்து ஆராய்ந்து வருவதாக பிரிட்டனின் டெய்லி மெய்ல் பத்திரிகை தெரிவித்துள்ளது.
ஈரானிடம் நான்கு அணுவாயுதங்களை தயாரிப்பதற்கு போதுமானளவு, செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பதாக தகவல்கள் வெளியானதையடுத்து அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனும் யுத்தத்திற்கு தயாராகி வருகின்றனர் என அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.
‘ஈரானிய நிலைகள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தவதற்கான திட்டத்தை அமெரிக்கா முன்னெடுக்கும் என பிரித்தானிய இராணுவ அதிகாரிகள் கருதுகின்றனர். அமெரிக்கா வலியுறுத்தினால் எந்த நடவடிக்கைக்கும் பிரித்தானிய இராணுவ உதவியை அமெரிக்கா பெறும் என பிரித்தானிய இராணுவ அதிகாரிகளை மேற்கோள்காட்டி பிரிட்டனின் கார்டியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
பிரிட்டனிலுள்ள இராணுவ அதிகாரிகள் பிரித்தானிய கப்பல்கள், டொமாஹாவ்க் ஏவுகணை பொருத்தப்பட்ட நீர்மூழ்கிகளை எதிர்வரும் மாதங்களில் எங்கு நிலைகொள்ளச் செய்வது சிறப்பானது என ஆராய்ந்துவருவதாக டெய்லி மெய்ல் தெரிவித்துள்ளது.
அதேவேளை இந்து சமுத்திரத்திலுள்ள பிரிட்டனின் கட்டுப்பாட்டிலுள்ள தீவான டியாகோ கார்ஸியாவிலிருந்து தகர்குதல் நடத்துவதற்கு அமெரிக்க அனுமதி கோரும் என பிரித்தானிய அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். அத்தீவில் கடற்படைத் தளமொன்றை கொண்டுள்ள அமெரிக்கா அதை முந்தைய மத்திய கிழக்கு மோதல்களின் போது பயன்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
அடுத்த வருடம் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன் தாக்குதலொன்றை ஆரம்பிப்பதற்கு பராக் ஒபாமா தயங்குவதாகவும் ஆனால் ஈரானிய அணுசக்தி திட்டங்கள் தொடர்பான அதிகரித்து வரும் பதற்றங்கள் இந்நிலையை மாற்றிவிடும் எனவும் பிரித்தானிய அரசாங்க மற்றும் இராணுவ வட்டாரங்கள் தெரிவித்ததாக கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது.
சவூதி ராஜதந்திரியொருவர் கடந்த மே மாதம் கொல்லப்பட்டதிலும் வாஷிங்டனிலுள்ள சவூதி தூதுவரை கடந்த கொல்வதற்கு இடம்பெற்ற சதியிலும் ஈரான் பின்னணியில் இருப்பதற்கான சாட்சியங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
ஈரான் மீது தாக்குதல் நடத்தவேண்டுமென இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன் யாஹு வலியுறுத்தியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈரானுக்கு மேற்குப்புறத்திலுள்ள ஆப்கானிஸ்தனரில் 98,000 அமெரிக்க துருப்பினர் உள்ளனர். கிழக்கிலுள்ள ஈராக்கில் 43,500 அமெரிக்கப் படையினர் உள்ளனர். ஆப்கானிஸ்தானில் 10,000 பிரித்தானிய துருப்பினரும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈரான் தயார்
இதேவேளை நேற்று வியாழக்கிழமை லிபியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அலி அக்பர் சலாஹி, மேற்படி செய்திகள் குறித்து கூறுகையில், எந்த அச்சுறுத்தலையும் ஈரான் தண்டிக்கும் எனக் கூறினார்.
“சர்வதேச விவகாரங்களைக் கையாள்வதில் துரதிஷ்டவசமாக, அமெரிக்கா தனது மதிநுட்பத்தை இழந்துவிட்டது. அது பலத்தில் மாத்திரமே தங்கியுள்ளது.
ஆம் நாம் மோசமானதை எதிர்கெர்ள தயாராகவுள்ளோம். ஆனால் ஈரானுக்கு எதிராக மோதலில் ஈடுபடுவற்கு முன் அவர்கள் இரு தடவை சிந்திப்பார்கள் என நம்புகிறோம்’ என ஈரானிய வெளிவிவகார அமைச்சர் சலாஹி கூறினார்.
ஈரான் எப்போதும் இஸ்ரேலின் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது. எனவே இது எமக்குப் புதிதல்ல. எட்டு வருடங்களாக இஸ்ரேலின் அச்சுறுத்தல் குறித்து நாம் கேள்விப்பட்டுவருகிறோம்.
எமது நாடு ஐக்கியமான ஒரு நாடு. எமது படைகளுக்கு நீண்ட வரலாறு உள்ளது. எமக்கு இந்த அச்சுறுத்தல்கள் புதியவை அல்ல. எமக்கு நம்பிக்கை உள்ளது. எமது நாட்டை நாம் பாதுகாத்துக்கொள்ள முடியும்” என துருக்கிய பத்திரிகையொன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிஸின் ஸ்தாபகத்தலைவரும் முன்னாள் அமைச்சருமான எம்.எச்.எம்.அஷ்ரப் கொல்லப்பட்டு 11வது ஆண்டு இன்றாகும் இந்த நாள் நாடுமுழுவதிலும் உணர்வுபூர்வமாக நினைவு கூறப்படுகின்றது.
கிழக்குமாகாணத்தின் பல இடங்களிலும் பல்வேறு நிகழ்சிகள ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. மட்டக்களப்பில் பிரதான நிகழ்ச்சி ஒன்று கல்குடாவிலும் ஏற்பாடாகியுள்ளது.
இலங்கை முஸ்லிம்களின் முடிசூடா மன்னனும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் காவிய நாயகனுமான முஹம்மத் ஹுஸைன் முஹம்மத் அஷ்ரப்பின் இழப்பின் 11ஆவது ஆண்டுப் பூர்த்தி செப்டம்பர் 16, 2011 இன்று ஆகும். 1986 இல் கட்சியின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்ற பின்னர், எம்.எச்.எம். அஷ்ரப்தான் முஸ்லிம் காங்கிரஸிற்கு புதிய தொலை நோக்கையும், புதிய பாதையையும் கொடுத்தவர் ஆவார்.
15 வருடங்களாக அஷ்ரப் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்த காலத்தில் அவரின் இலட்சிய வீறும், சாதிக்கும் ஆற்றலும் காரணமாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பற்பல சாதனைகளைக் கண்டது. இவரது அரசியல் நிலைமைகளை சரியாக கணக்குப் போடும் திறன், அர்ப்பணிப்பு, தியாகம் , வீரம் ஒரு தேசிய அரசியல் தலைவனாக இவரை உயர்த்தியது.
இலங்கையின் அரசியல் வானில் பிரகாசமாக மின்னிகொண்டிருந்த இந்த நட்சத்திரத்தை மர்மமான ஒரு விமான வெடிப்பு அழித்தொழித்து, இதற்கு புலிகள் பிரதான காரணமாகவும், இன்னும் பலர் இதற்கு காரணம் என்றும் இன்றும் நம்பப்படுகின்றது.
கேகாலை மாவட்டத்தில் அரநாயக்க பகுதியில் உரக்கந்த மலைத்தொடர்மேல் இலங்கை விமானப் படையின் எம்.ஐ. 17 ரக ஹெலிக்கொப்டர் வெடித்து சிதறிய துன்ப நிகழ்வில் இவர் மரணமானார். அன்று இவருடன் சென்ற , விமான ஊழியர், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், தனிப்பட்ட ஊழியர்கள், அரசியல் ஆதரவாளர்கள் என 14 பேர் கொல்லப்பட்டனர்.
விமான வெடிப்பு, விபத்தா அல்லது நாச வேலையா என ஆய்வு செய்ய புலனாய்வு நடவடிக்கை அன்று தொடங்கியது ஆனால் புலனாய்வு முடிவுகள் இன்றுவரை வெளிவரவில்லை .
இந்த நிலையில் அவரின் நினைவாக அவர் எழுதிய கவிதை ஒன்றை இங்கு பதிவு செய்கின்றோம்.
போராளிகளே புறப்படுங்கள்!
எம்.எச்.எம்.அஷ்ரப்
போராளிகளே புறப்படுங்கள்! ஒரு துப்பாக்கியின் ரவைகளினால் எனது இரைச்சல் அடங்கி விட்டதுக்காய் நமது எதிரி வென்றுவிட்டான் என்று நீ குழம்பிவிடக் கூடாது!
அன்றுதான் போராட்டம் எனும் நமது இருண்ட குகைக்குள் வெற்றிச் சூரியனின் வெண்கதிர்கள் நுழைகின்றன என்பதை நீ மறந்து விடவும் கூடாது!
உனது தலைவனுக்கு ஒன்றுமே நடக்கவில்லை என்பதனை நீ எப்போதும் மறந்திடாதே!
தலைவர்கள் ஒரு போதும் மரணிப்பதில்லை என்பதனை நான் சொல்லித்தரவில்லையா? என்னை அதற்காய் நீ மன்னித்து விடுவாயாக!
நாம் அல்லாஹ்வின் பாதையில் நடந்து வந்தவர்கள் நீங்களெல்லாம் தொடர்ந்து அப்பாதையில் நடக்க இருப்பவர்கள!
இந்தப் போராட்டத்தில் சூடுண்டாலும், வெட்டுண்டாலும் சுகமெல்லாம் ஒன்றேதான்!
நமது போராளிகள் யாரும் மரணிக்கப்போவதில்லை!
போராளிகளே புறப்படுங்கள் ஓரத்தில் நின்று கொண்டு ஓய்வேடுக்க நேரமில்லை!
இந்த மையத்தைக் குளிப்பாட்டுவதில் உங்கள் நேரத்தை வீனாக்க வேண்டாம்!
தண்ணீரும் தேவையில்லை பன்னீரும் தேவையில்லை!
உங்கள் தலைவனின் உடலில் இரத்தத்தால் சந்தனம் பூசப்பட்டுள்ளதா?
அது அவனின் மண்ணறையில் சதா மணம் வீச வேண்டுமெனில் தூக்கி விரைவில் எடுத்துச் சென்று தொழுது விட்டு அடக்குங்கள்!
இந்த மையித்தைக் குளிப்பாட்டுவதால் கடைசி நேரத்தில் தலைமைத்துவக் கட்டுப்பாட்டை மீறாதீர்கள்!
கண்ணீர் அஞ்சலிகள் போதும் கவலைகளை கொஞ்சம் மறந்து தூக்குங்கள்!
இரத்தத்தால் தோய்ந்திருக்கும் எனது ஆடைகளை எடுத்து வீசாதீர்கள்! வேண்டுமெனில் எனது “இஹ்ராம்” துண்டுகளை அவற்றுக்கு மேலே எடுத்துப் போடுங்கள்!
எனது உடலில் இருந்து பொசிந்து வரும் இரத்தச் சொட்டுக்கள், அவற்றை தழுவும் பசியுடன் இருப்பதைப் பாருங்கள்!
எனது மூக்குக்குள்ளும் எனது காதுகளுக்குள்ளும் பஞ்சுத் துண்டங்களை வைத்தென் முகத் தோற்றத்தை பழுதாக்கி விடாதீர்கள்!
சில வேளைகளில் உங்களை நான் சுவாசிக்காமலும் சில வேளைகளில் உங்களை நான் கேட்காமலும் சில வேளைகளில் உங்களை நான் பேசாமலும் இருந்திருக்கின்றேன்!
குருடர்களாகவும் செவிடர்களாகவும் ஊமையர்களாகவும் இல்லாதவர்களால் இப்போராட்டத்தில் நின்று பிடிக்க முடியாது!
கபுறுக் குழிக்குள்ளாவது என்னை சுவாசிக்க அனுமதியுங்கள்! ஹ_ர்லீன்களின் மெல்லிசைகளை கேட்டு ரசிக்கும் பாக்கியத்தைத் தாருங்கள்!
தூக்குங்கள் இந்த மையித்தை இன்னும் சுணக்கவும் தேவையில்லை. தூக்கி விரைவில் எடுத்துச் சென்று தொழுது விட்டு அடக்குங்கள்! ஓரத்தில் நின்றுகொண்டு ஓயாமல் தர்க்கம் செய்யும் வீரத்திற்கு வையுங்கள் முற்றுப் புள்ளி!
கருத்து வேறுபாடென்னும் கறையான்கள் வந்துங்கள் புரிந்துணர்வை சீரழிக்கும்! மிகவும் புத்தியுடன் நடந்துகொள்ளுங்கள்!
நோர்வே தலைநகர் ஓஸ்லோவின் மத்திய பகுதியில் நடாத்தப்பட்ட குண்டு தாக்குதல்கள் மற்றும் தலைநகர் பகுதியில் இருந்து 20 மையில் துரத்தில்அமைந்துள்ள தீவில் நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், ஆகிய இரண்டு பயங்கரவாத தாக்குதல்களில் 93 பேர் கொல்லப்பட்துள்ளனர். இவற்றுக்கு பின்னால் ஐரோப்பாவை இணைக்கும் கிஸ்தவ வலது சாரி பயங்கரவாதம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலை நடத்திய Anders Breivik என்ற பயங்கரவாதி ஒரு கடும்போக்கு கிஸ்தவ அடிப்டைகொண்ட வலதுசாரி இரகசிய அமைப்பு ஒன்றை சார்ந்தவன் என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. Video
Anders Breivik தனது பயங்கரவாத தாக்குதலை நிகழ்த்த முன்னர் நைட்ஸ் டேம்பளர் என்ற தான் சார்ந்த இரகசிய அமைப்பின் 1500 பக்கங்கள் கொண்ட “2083 – A European Declaration of Independence,” என்ற தலைப்பிலான கொள்கை பிரகடனம் ஒன்றை பின்லாந்தின் வலதுசாரிக் கட்சியின் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளான். அந்த கொள்கை பிரகடனம் ஒன்பது வருடங்களாக அவனும் அவனின் இயக்கம் உறுபினர்களும் இணைந்து தயாரித்துள்ளனர் என்று நோர்வே செய்திகள் தெரிவிக்கின்றது .
அதனை 20 நிமிட வீடியோ பதிவாகவும் அனுப்பியுள்ளான். அதன் மிகவும் சுருக்கமாக வீடியோ ஒன்றும் Youtube பில் பதிவு செய்யப்பட்டுள்ளது . ஐரோப்பாவில் இஸ்லாமிய மயமாக்களுக்கும், முஸ்லிம்களுக்கும், மார்க்சியர்களுக்கும் எதிராக புனித சிலுவை போரை ஆரம்பிக்க உருவாக்கப்பட்ட இரகசிய அமைப்பொன்றின் தகவல்களாக அது வெளிவந்துள்ளன.
கொள்கை பிரகடத்தில் 2083 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஐரோப்பா சர்வவல்லமை கொண்ட வெள்ளையரின் சாம்ராஜ்யமாக தமது பயங்கரவாத தாக்குதல்களின் ஊடாக உருவாக்கப்படும். அதன் முதல் படியாக ஐரோப்பாவை அழித்து கொண்டிருக்கும் தற்போதைய இடது சாரி சிந்தனை கொண்ட அரசுகள் அழிக்கப்படும். அதன் மூலம் ஐரோப்பா இஸ்லாமிய பயமாவது தடுக்கப்படும். அதை தொடர்ந்து இஸ்லாத்தின் மீதான சிலுவை போர் ஒன்று பிரகடனமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
அந்த பிரகடனம் 2002 இல் லண்டனில் நிறுவப்பட்ட Knights Templar என்ற ஒரு இரகசிய பயங்கரவாத அமைப்பு பற்றி கூறுகின்றது , அந்த அமைப்பின் ஒன்றுகூடல் ஒன்றுக்கு ஐரோப்பாவின் பல நாடுகளில் இருந்து 12 பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். “பேச்சுவார்த்தைக்கான காலம் முடிந்து விட்டது. இனிமேல் ஆயுதப்போராட்டமே ஒரே வழி. உலகம் என்னை இப்போது ஒரு பயங்கரவாதியாக கணிக்கலாம். ஆனால் சில காலத்தின் பின்னர் மக்கள் என்னை நியாயத்திற்காக போராடிய தியாகியாக மதிப்பார்கள்.”
இவ்வாறு அந்தக் பயங்கரவாதியின் பிரகடன செய்தி அமைந்துள்ளது. பன்முகக் கலாச்சாரம் என்ற பெயரில் நாட்டை சீரழிக்கும் ஐரோப்பிய அரசுகளை கவிழ்ப்பதும், இஸ்ரேலுக்கு உதவுவதும், முஸ்லிம்களை ஐரோப்பாவை விட்டு விரட்டுவதும் அந்த இரகசிய அமைப்பின் நோக்கமாக குறிபிடப்பட்டுள்ளது.
இந்த பயங்கரவாதி ஒருதனி மனிதன் அல்ல இது ஒரு சிந்தை போக்கு இதன் பின்புலத்தில் பல சக்திகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 93 பேரை கொன்றதாக இவன் குற்றவாளியாக நீதிமன்றத்தால் உறுதிப்படுத்த பட்டால் இவன் 21 வருடங்கள் மட்டும் தண்டனை பெறுவான் என்று தெரிவிக்கப்படுகின்றது.
முதல்முறையாக கிறிஸ்தவ வலதுசாரி இயக்கம் என்ன்று எழுதியது பெரும் ஆச்சிரியத்தை தருகிறது .இல்லாவிட்டால் தெரியும்தானே …………..இன்னும் ஒன்று . லங்கா ஸ்ரீ ஆசிரியர் எல்லாம் தெரிந்த மன்னாக்கட்டி மாஸ்டர் போல .எதுக்கெடுத்தாலும் முஸ்லிம் பயங்கரவாதி என்றசொல்லை மறக்கமாட்டான் போல .எல்லாவத்தையும் நேரில் பார்த்தவன்போல எங்கிருந்து இவன் வந்தான் ..முதல்ல இவனை திருத்தினால் பூமியில பாதிபேரை திருத்தினமாதி ……..